7/26/2013

புன்னகைப்பூ



கடிய வெய்யில் நாளொன்றில் சட்டென மேகம் இருண்டு
   முகத்தில் சிலீரென பட்டுபோகும் மழைத்துளி

என்கைபட நட்டு நீரூட்டிய கொல்லைச்செடி
   முதலில் கிளைத்து விடும் மலர்மொட்டு

நெடும் பயணத்திற்காய் பேருந்தில் ஏறி ஜன்னலோர
   இடம் கிடைத்து அமர்ந்ததும் வரும் அமைதி

கொளுத்தும் வெயிலில் தார்வார்க்கும் தொழிலாளி இடையில்
   நிறைவாய் தேனீர் பருகுவதை காணும் நெகிழ்ச்சி

இன்னும் பல குட்டித்தருணங்கள் தந்துபோகும்
   மெலிதாய் என்னிதழோரம் ஓர் புன்னகைப்பூ

                                        

No comments:

Post a Comment