11/28/2013

வலைப்பூ கவிதை


















தாய் தேசம் தாண்டி
தொலை தூரம் வந்து
அந்நிய தேசத்தில்
அந்நியப்பட்டு

ஆங்கில அனர்த்தங்களை
அருமையென ரசித்து
அந்திப் பொழுதுகளை
ஆழ்கனவில் தொலைத்து

தமிழுக்கு தவித்த
தன்னிச்சை தேடலில்
சட்டென்று மாட்டும்
யாரோ எப்போதோ பதித்த
வலைப்பூ கவிதை...!

                                                       -  தாமரை யோகேஷ்

No comments:

Post a Comment