12/24/2011

உடன் உறையும் உன்னதம்


                                                    





இமைக்கும் நொடிப் பொழுதில்

 எழிலுரு மறைந்திடுமோ
இமைக்கா இருவிழிகள்
 எனக்கு தரக் கேட்டேன்

பூந்தளிர் நடையினால்
 பொன்னுடல் நொந்திடுமோ
பூக்கள் போர்த்திய
 புதுனிலம் நான் கேட்டேன்

கேளாமல் தரும் முத்தம்
 கண்ணீரை தந்திடுமோ
அன்பு பெருகுங்கால்
 அழாத மனம் கேட்டேன்

கரையும் மணித் துளிகள்
 காலத்தை கரைத்திடுமோ
உறையும் உன்னதமே
  ஓடாத நாள் கேட்டேன் - என்னுடன்
உறையும் உன்னதமே
  ஓடாத நாள் கேட்டேன்
                                                             
                                                                  - தாமரை யோகேஷ்



No comments:

Post a Comment