இமைக்கும் நொடிப் பொழுதில்
எழிலுரு மறைந்திடுமோ
இமைக்கா இருவிழிகள்
எனக்கு தரக் கேட்டேன்
பூந்தளிர் நடையினால்
பொன்னுடல் நொந்திடுமோ
பூக்கள் போர்த்திய
புதுனிலம் நான் கேட்டேன்
கேளாமல் தரும் முத்தம்
கண்ணீரை தந்திடுமோ
அன்பு பெருகுங்கால்
அழாத மனம் கேட்டேன்
கரையும் மணித் துளிகள்
காலத்தை கரைத்திடுமோ
உறையும் உன்னதமே
ஓடாத நாள் கேட்டேன் - என்னுடன்
உறையும் உன்னதமே
ஓடாத நாள் கேட்டேன்
- தாமரை யோகேஷ்
No comments:
Post a Comment