12/22/2016

உழவன் உயில்

உழுது , விதைச்சு , உயிரோட வளத்து
 நிறமாத கர்பிணியா நெல்லோட நிக்கப்ப
பூரிச்ச அப்பன் நான் எந்தாயி
என்னோட சோகத்த ஏரோட்ட
உங்கிட்ட பாட்டாத்தான் படிச்சிருக்கேன்
அத்தன அறுப்புக்கும் அசராம 
விளச்சு கொடுத்தவளே 
உங்கருணைக்கு எத கொடுக்க 
நீ போட்ட பிச்சையில 
வளத்த ஒடம்ப உரமாத்தான்
நாந் தாரேன் நிம்மதியா கண்ணுறங்க 
மடி தாயேன் என் பூந்தாயி


          - தாமரை யோகேஷ்

No comments:

Post a Comment