12/01/2013

My Fav Books


1. Ponniyin selvan  ( Kalki)
2. Paarthiban kanavu ( Kalki)
3. Srirangathu dhevadhaikal ( Sujatha)
4. Oru puliya marathin kadhai ( Sundara Ramaswamy)
5.  Ennangal ( Udhyamoorthi )
6. Kadal pura (Sandilyan)
7. Jeniffer ( Translated by Ra. Ki . Rangarajan )
8. Udal Porul anandhi (Javar Seetharaman )
9. Unnal Mudiyum Thambi (Udhyamoorthi)
10. En iniya vizhame ( Aarnika nasar )

11/30/2013

தண்ணீர் தேசம்

                       
                                                 வைரமுத்து அவர்களின் தண்ணீர் தேசம் நூல் இணைப்பு..!


                                                                                   Thanner Dhesam

11/28/2013

Movies

Man on Fire 

Sister Anna Do you ever see the Hand of God in what you do?
Creasy No, not for a long time.
Sister Anna The Bible says, "Do not be over come with evil, but overcome...?
Creasy But overcome evil with good."
Creasy [in spanish] That's Romans Chapter 12 Verse 21..
Creasy I am the sheep that got lost, Madre.

The pursuit of happyness


Christopher Gardner: Hey. Don't ever let somebody tell you... You can't do something. Not even me. All right? 
Christopher : All right. 
Christopher Gardner : You got a dream... You gotta protect it. People can't do somethin' themselves, they wanna tell you you can't do it. If you want somethin', go get it. Period. 


Christopher Gardner:It was right then that I started thinking about Thomas Jefferson on the Declaration of Independence and the part about our right to life, liberty, and the pursuit of happiness. And I remember thinking how did he know to put the pursuit part in there? That maybe happiness is something that we can only pursue and maybe we can actually never have it. No matter what. How did he know that?

Oh lord don't move my mountain

Craft

As a girl me always fond of  beads.. especially pearls wow they are so adorable. Here are a  few bead works that I have done !






Dessert


அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!
















                                                                              - ரிலாக்ஸ் ப்ளீஸ்



வலைப்பூ கவிதை


















தாய் தேசம் தாண்டி
தொலை தூரம் வந்து
அந்நிய தேசத்தில்
அந்நியப்பட்டு

ஆங்கில அனர்த்தங்களை
அருமையென ரசித்து
அந்திப் பொழுதுகளை
ஆழ்கனவில் தொலைத்து

தமிழுக்கு தவித்த
தன்னிச்சை தேடலில்
சட்டென்று மாட்டும்
யாரோ எப்போதோ பதித்த
வலைப்பூ கவிதை...!

                                                       -  தாமரை யோகேஷ்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

எனக்குப் பிடித்த தமிழ் பாடல்களில் குறிப்பிடத்தக்கது இப்பாடல்.    எத்தனை இனிய, ஆழ்ந்த, பின்னிய வார்த்தைகள்; மொழியாள்மை; தமிழை குழிவியென கையாண்ட பாவம்; பக்தியின் உருக்கம்.. இப்படியும் கவியியற்ற ஒருவருக்கு இயம்புமா? தமிழின் இனிமையை நமக்கு தர நம் முன்னோர் மறந்துவிட்டனரா இல்லை நாம் மறுத்துவிட்டோமா? எல்லாம் உணர்ந்துதான் பாரதி மெல்லத்தமிழினி சாகும் என்றானோ? இன்னும் பல கேள்விகள்.. என் அழகுத்தமிழுக்கு அருணகிரியாரின் காணிக்கை இங்கே..!


 


முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.


"முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை "


முத்தினைப் போன்றொதொரு வெண்ணிறத்தின் எழிலுக்கு
ஒத்ததாய் அமைந்தவொரு ஒளிமிகு இளஞ் சிரிப்புடனே
தேவர்க்குத் தலைவனாம் இந்திரன் பெற்றிட்ட
தேவயானை எனும் கரிமகளின் நாயகனே!

"சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர"

அன்னையாம் உமையவள் அன்புடன் ஈன்றிட்ட
சக்திவேல் எனும் ஆயுதத்தை கையினில் ஏந்துகின்ற
சரவணபவ என்கின்ற அறுமுகக் கடவுளே!
முக்தியெனும் வீடுநிலை பெற வித்தாக இருப்பவரே!
தந்தைக்கே ஒரு மந்திரத்தின் பொருள் சொல்லி
தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்ற
குருவான சிவனுக்கும் குருவான பெருங்கடவுளே!

"என ஓதும் முக்கட் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மு வர்க்கத்து அமரரும் ..... அடிபேணப்"


என்றெல்லாம் உனைத்துதிக்கும் முக்கண்ணன் பரமசிவனுக்கு
முன்மைக்கெல்லாம் மூத்ததான முழுமுதற் பொருளான
சுருதியெனும் வேதத்தின் முற்றுப் பொருளான
"ஓம்" என்னும் தனிமந்திரத்தை மடி மீதமர்ந்து உபதேசித்து
அடிமுடி அறியவெண்ணி அங்குமிங்கும் அலைந்த
பிரமன் திருமால் இருவரும் கூட
முப்பத்து முக்கோடி தேவரும் சேர்ந்து
நின்னடி பணிந்து வாழ்த்தி நின்றிடவும்,

"பத்துத்தலை தத்தக் கணை தொடு"

திக்குக்கொரு தலையெனப் பத்துத்தலை படைத்திட்ட
தென்னிலங்கைத் தேவனாம் இராவணனின் தலைகள் சிதறி வீழ
அன்றங்கு ஓர் அம்பை விட்டு அவுணரை அழித்த,

"ஒற்றைக்கிரி மத்தைப் பொருது"

ஒப்புவமை இலாத மந்திரமெனும் மலையினை
மத்தாகவே கொண்டு பாற்கடலைக் கடைந்திட்ட,

"ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்"

அன்றொருநாள் அண்ணன் தம்பிகளுக்கிடையே
மூண்டதோர் பாரதப் போரின் பதின்மூன்றாம் நாளினிலே
அதமத்தின் வழி நின்று அபிமன்யுவைக் கொன்ற
ஜயத்திரதன் எனும் அரசர் கோமானை,
"மறுநாள் மாலை சூரியன் மறைவதற்குள்
என்மகனின் மறைவுக்குக் காரணமான
ஜயத்திரதனைக் கொல்லானேயாகில்,
அக்கினியில் புகுந்து அன்றே உயிர் துறப்பேன்" என
சூளுரைத்த பத்தனைக் காக்கவென
'போரிலே ஈடுபடேன்' எனும் வாக்கினையும் மறந்து
தன் கையில் தாங்கியுள்ள சக்கரத்தை விட்டெறிந்து
சூரியனைச் சிலகாலம் சயனிக்கச் செய்ததாலே
வெளிவந்த சிந்துராசனாம் ஜயத்திரதனை
விரைவாகக் கொல்லச் செய்தருளி உதவிட்ட,

"பத்தற்கு இரதத்தைக் கடவிய"

இத்துணை வல்லமை இயல்புடனே படைத்திருந்தும்
அத்தனையும் காட்டாமல் அடக்கமாக நண்பனுக்குத்
தேரோட்ட இசைந்து தேர்ப்பாகனாய் வந்திட்ட

"பச்சைப் புயல்"


மரகதம் என்கின்ற பச்சைமணியின் நிறத்தினை ஒத்திட்ட
அன்பருக்கு அருளிடவே புயல் போல வந்தருளும்
மரகத வண்ணன், பச்சைமாமணி வண்ணனும்

"மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ..... ஒருநாளே"

மெச்சுகின்ற பரம் பொருளே! என்னை நீ
பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் ஒருநாளும்
உண்டோ என நான் இறைஞ்சுகின்றேனே!

[இனி வரும் வரிகள் முருகன் அசுரருடன் செய்த போரினை விரிவாக வர்ணிக்கிறது]

"தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக்"


தித்தித்தெய என்கின்ற தாளத்துக்கு இசைவாக
முத்துகள் அமைந்த சிலம்பினை அணிந்த
நர்த்தனம் செய்கின்ற பதங்களை வைத்து
பார்த்தவர் நடுங்கும் பத்திரகாளியும்
எத்திக்கும் சுழன்று தாண்டவம் செய்யவும்,

"கழுகொடு ..... கழுது ஆடத்"

பிணங்களைக் கொத்தவெனக் காத்திருக்கும் கழுகுகளுடன்
பிணந்தின்னும் பேய்களும் சேர்ந்தங்கு கூத்தாடவும்,

"திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக ..... என ஓதக்"


எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும்
அட்டப் பயிரவர் என்கின்ற எண்மரும்
ஆட்டத்தில் அழகிய இக்கூத்தினுக்கு ஏற்ப
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
என்னுமோர் தாள ஓசையினைக் கூறிடவும்,

"கொத்துப்பறை கொட்டக்"

கூடவே தாரை, தமுக்கு, தப்பட்டம் என்கின்ற
பற்பல பறைவாத்தியங்களையும் முன்சொன்ன
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
என்கின்ற அதே தாளத்தில் அழகுற முழங்கிடவும்,

"களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை
கொட்புற்று எழ"


பலகாலம் வாழ்ந்திருந்து, பல போர்களைப் பார்த்திட்ட
கிழமான முதிர்ந்த கோட்டான்களும் மகிழ்ந்து
குக்குக்குகு குக்குக் குகுகுகு, "குத்திப் புதை", "புக்குப் பிடி" என
கூக்குரலிட்டுக் குழறி, வட்டமெனச் சுழன்று
இட்டமுடன் மேலே எழுந்திடவும்,

"நட்புற்று அவுணரை வெட்டிப் பலி யிட்டுக்"

தனக்கு வரமளித்த சிவனாரின் மகனென்னும்
இணக்கத்தை மறந்து பகைகொண்ட அசுரர்களை
வெட்டிக்கொன்றங்கு குவித்துப் பலிகொண்டு,

"குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ..... பெருமாளே."

அவுணர் குலத்துக்கு இசைவாய் நின்றிட்ட
கிரௌஞ்சமெனும் மாமலையும் வேலாலே குத்துண்டு
பொடிப்பொடியாய் உடைந்துபட அறவழியில் நின்றன்று
அசுரருடன் போர் செய்த பெருமையிற் சிறந்தவரே!

வரிகளும் பொருளும் தந்த இணையத்திற்கு (http://aaththigam.blogspot.in/2006/07/3.html)  நன்றி.

11/27/2013

மஹாபாரதம்

மஹாபாரதம் முழுமையாக படிக்க விழைவோர் நுழைகோல்..!





I loved this epic as a kid, these epics helped me to expand my reading horizon..This story (& characters) still holds a firm grip in my heart. I'm soo happy to found this link , me highly recommend this link to anyone who wants to read epic in the epic style.. I am so grateful to the founder of this blog for his concerted effort to present parvams without sacrificing the essence & beauty of the story.



http://mahabharatham.arasan.info/



10/07/2013

Oh Lord, don't move my mountain

No matter you are from which religion I bet this song & the situation will melt you away.. This song has been my antidepressant medication ever since me found through the movie ' The pursuit of happyness ' 
     That's what I am praying to almighty..
     Oh Lord don't move my mountain.. Please give the strength to climb & lead me all around..!


Now Lord Don't Move My Mountain
But Give Me The Strength To Climb
And Lord, Don't Take Away My Stumbling Blocks
But Lead Me All Around
      
Oh Lord You Don't Have To Move The Mountain
But Give Me The Strength To Climb
And Lord, Don't Take Away My Stumbling Blocks
But Lead Me All Around

Lord I Don't Bother Nobody
I Try To Treat Everybody The Same
But Everytime, I Turn My Back
They Scandalize My Name

But Oh Jesus, You Don't Have To Move My Mountain
But Give Me The Strength To Climb
And Lord Don't Take Away My Stumbling Blocks
But Lead Me All Around

Now When My Folks Would Slay Me
These Things They Will Try To Do
But Lord, Don't Touch Em
But Wiithin Their Heart
Make Em Give Their Life To You

Oh Master You Don't Have To Move My Mountain
But Give Me The Strength To Climb
And Lord, Don't Take Away My Stumbling Blocks
But Lead Me All Around.

8/25/2013

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(
புல்லாங்குழல)






 

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(
புல்லாங்குழல்)

 குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒருகொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(
புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(
புல்லாங்குழல்)




 


Butter Fruit/Avocado Milkshake

This simple & flavoured milkshake will satisfy your palate. It took a while for me to understand that our bangalore's butterfruit is called as 'avacado' here. In India itself I'm a big fan of avocado.. after I came here, it's become must-haves in my weekly grocery list.


                     

Ingredients:
                    Avocado     -  1 medium size fruit
                 Non fat milk   -  3 cup
                 Cardamom     -  a pinch
                 Sugar             -  3 tsp

Method :
                  Grind all the ingredients in the blender till it mix well. Add ice or keep it in the fridge for 2-3 hrs. Serve cold..!

8/05/2013

Let the world stop..!


Let the beautiful sky freeze 
let the nodding leaves pause
let the flying birds standstill
let the moving world cease
Me feel more safe & peaceful than my kid
    when he hugs me tight..
let us go to sleep with delight..!


                                      

7/26/2013

புன்னகைப்பூ



கடிய வெய்யில் நாளொன்றில் சட்டென மேகம் இருண்டு
   முகத்தில் சிலீரென பட்டுபோகும் மழைத்துளி

என்கைபட நட்டு நீரூட்டிய கொல்லைச்செடி
   முதலில் கிளைத்து விடும் மலர்மொட்டு

நெடும் பயணத்திற்காய் பேருந்தில் ஏறி ஜன்னலோர
   இடம் கிடைத்து அமர்ந்ததும் வரும் அமைதி

கொளுத்தும் வெயிலில் தார்வார்க்கும் தொழிலாளி இடையில்
   நிறைவாய் தேனீர் பருகுவதை காணும் நெகிழ்ச்சி

இன்னும் பல குட்டித்தருணங்கள் தந்துபோகும்
   மெலிதாய் என்னிதழோரம் ஓர் புன்னகைப்பூ

                                        

7/08/2013

புவியைக் காக்க 10 உறுதிமொழிகள்!




 1. இயன்றவரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பேன்

 2. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு மரக் கன்று நடுவேன். நண்பர்களின் பிறந்தநாளுக்கு மரக்கன்றுகளைப் பரிசாகக் கொடுப்பேன்.

3. என் பெற்றோர் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கிறதா எனச் சோதிக்கச் சொல்வேன்.

4. என் வீடு, பள்ளி என அனைத்து இடங்களிலும் தண்ணீர் வீணாவதைத் தடுப்பேன்.

5. மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

6. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்வதைப் பழக்கமாகக்கொள்வேன்.

7. என் வீட்டில் குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, சி.எஃப்.எல். விளக்குகளைப் பொருத்தச் சொல்வேன்.

8. கண்ட இடங்களில் குப்பைக் கூளங்களைப் போடாமல் தடுப்பேன்.

9. சாலைகளில் எச்சில் துப்புவது, பொது இடங்களைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தடுப்பேன்.

10. புவி வெப்பம் அடைதல், காலநிலை மாற்றம் தொடர்பாகப் பேரணி, கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், வீதியோர நாடகங்கள் மூலம் விழிப்பு உணர்வுப் பிரசாரம் மேற்கொள்வேன்.

                                                                                                                                  - Vikatan  

7/04/2013

Healthy Triple Delight Laddu

Me tried rava laddu with carrots & urad dhal.. kinda worried about urad dhal, but it mixed very well with other ingredients & turned out as tasty triple delight laddu..!  


Ingredients:
Dry roasted rava   1 cup
Dry roasted & powdered urad dhal 1 cup
Grated carrot  1 cup
Sugar  2 cup
Ghee 1/4 cup
Milk  1 cup
Cashew & kismis/raisins Handful

Method :
  • Saute cashews & raisins in a pan with 2 tsp ghee till it turns slightly brown & keep aside
  • In the same pan add 1/4 cup ghee then add grated carrots
  • Saute the carrots in medium flame for 5 minutes then add 1 cup milk
  • Cook it covered for few more minutes till the carrots get cooked
  • Finally add roasted rava & urad dhal, saute it  for 5 - 6 more minutes
  • Turnoff the stove add sugar, roasted cashews & raisins
  • Let it cool for 5 minutes, when the mixture is ready to handle start to make round shape balls
  • If you feel the mixture is too dry add few tsp of milk 
  • Let the laddus rest for few more minutes 
  • Now healthy , yummy laddus are ready to taste 
  • Store them in the air-tight container



6/20/2013

42 lessons life taught me..!




Written by Regina Brett, 90 years old, of the Plain Dealer, Cleveland , Ohio .

"To celebrate growing older, I once wrote the 42 lessons life taught me. It is the most requested column I've ever written.

My odometer rolled over to 90 in August, so here is the column once more:



1. Life isn't fair, but it's still good.

2. When in doubt, just take the next small step.

3. Life is too short – enjoy it..

4. Your job won't take care of you when you are sick. Your friends and family will.

5. Pay off your credit cards every month.

6. You don't have to win every argument. Stay true to yourself.

7. Cry with someone. It's more healing than crying alone.

8. Save for retirement starting with your first pay check.

9. When it comes to chocolate, resistance is futile.

10. Make peace with your past so it won't screw up the present.

11. It's OK to let your children see you cry.

12. Don't compare your life to others. You have no idea what their journey is all about.

13. If a relationship has to be a secret, you shouldn't be in it...

14 Take a deep breath. It calms the mind.

15. Get rid of anything that isn't useful. Clutter weighs you down in many ways.

16. Whatever doesn't kill you really does make you stronger.

17. It's never too late to be happy. But it’s all up to you and no one else.

18. When it comes to going after what you love in life, don't take no for an answer.

19. Burn the candles, use the nice sheets, wear the fancy lingerie. Don't save it for a special occasion. Today is special.

20. Over prepare, then go with the flow.

21. Be eccentric now. Don't wait for old age to wear purple.

22. The most important sex organ is the brain.

23. No one is in charge of your happiness but you.

24. Frame every so-called disaster with these words 'In five years, will this matter?'

25. Always choose life.

26. Forgive but don’t forget.

27. What other people think of you is none of your business.

28. Time heals almost everything. Give time time.

29. However good or bad a situation is, it will change.

30. Don't take yourself so seriously. No one else does..

31. Believe in miracles.

32. Don't audit life. Show up and make the most of it now.

33. Growing old beats the alternative -- dying young.

34. Your children get only one childhood.

35. All that truly matters in the end is that you loved.

36. Get outside every day. Miracles are waiting everywhere.

37. If we all threw our problems in a pile and saw everyone else's, we'd grab ours back.

38. Envy is a waste of time. Accept what you already have not what you need.

39. The best is yet to come...

40. No matter how you feel, get up, dress up and show up.

41. Yield.

42. Life isn't tied with a bow, but it's still a gift."

6/12/2013

ஈடில்லா என்மகன்


What a wonderful song written by Thamarai.. the song depicts mother's emotional bond towards her son.. I'm dedicating this to my son who changed my life upside down.. you just came like a star from the heaven  You made me proud, you gave me hope and new meaning to my life. After your birth  the word 'self' vanished from my life.. every part of my cell started to protect you without my sense..I know I am not a ideal mother but I am trying to give my best to you.. I am learning from my mistakes & you are a great teacher. ,You taught  me how to be a mom, you taught  me about my responsibilities, you taught me how to love from the heart without any expectation,  you showed  the divine form of myself to me; you made me to realize my mom's sleepless nights, unconditional love & the secured world she created for me.. All of sudden my world become so bright, sweet  & tender.. My heart filled with eternal peace just watching you sleep next to me.. I never knew I could feel so proud and gifted, I could be adored so much by someone. Thanks for each and every movements & memories you are sharing with me..I am always proud of you.. I love you  my son..!!!




கண்கள் நீயே..காற்றும் நீயே 
தூணும் நீ ..துரும்பும் நீ 
வண்ணம் நீயே ..வானும் நீயே 
ஊனும் நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே

ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக 
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் தேனே
தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்

எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில் 
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு 
தள்ளிப் போனால் தவிக்கிறேன் 
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து 
கருவில் வைக்க நினைக்கிறேன் 
போகும் பாதை நீளம் 
கூரையாய் நீல வானம் 

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ 
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ 
நான் கொள்ளும் கர்வம் நீ 

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை 
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது 
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை 

கண்கள் நீயே..காற்றும் நீயே 
தூணும் நீ ..துரும்பும் நீ 
வண்ணம் நீயே ..வானும் நீயே 
ஊனும் நீ ..உயிரும் நீ





5/29/2013

மினியபோலிஸ் உழவர் சந்தை


 நான் திருமணம் முடிந்து இங்கு குடிபெயர்ந்தபோது அமெரிக்கா என்னிடம் இருந்து பிடுங்கி  கொண்டவை பல. காலையில் கேட்கும்  பால் வண்டி சத்தம், அம்மாவின் பெட் காபி (டீ) , என்ன காய் என்றே புரியாமல் கூவி கொண்டுவரும் காய்கறிக்காரன், 11 மணிக்கு வரும் கீரைக்காரம்மா, மணக்கும் மல்லிகை, ரோட்டோரம் சூடாக கிடைக்கும் பஜ்ஜி போண்டா காரச்சட்னி, சண்டே சரவணாஸ்டோர் ஷாப்பிங்...ம்ம்ம் பட்டியல் முடிக்க இந்தப் பக்கம் போதாதுங்க..!

                யதோச்சையாக இந்த ஊர் உழவர் சந்தைக்குள் நுழைந்தபோது  ஏதோ கால்கள் தாய் மண்ணை தொட்டது போல் ஒரு சந்தோஷம்..நம்ம ஊரை  தோக்கடிக்கரமாதிரி ஒரு கூட்டம், கண்ணை பறிக்கர நிறத்துல காய்கறிகள், சந்தைக்கே உரிய வாசனை ( யாருங்க அது நாத்தம்னு சொல்ரது), நம்மிடம் சினேகமாய் கேரட் விற்கும் கடைகாரர், கீரை வகையை கூறி அவர்கள்   சமைக்கும் விதத்தை விளக்கும் பெண்மணி,விதவிதமாய் பருப்பு வகைகள், நம்மை இசைத்து, பாடி மகிழ்விக்கும் கலைஞர்கள், நாட்டுத்தேன், சமையலுக்கு மணமூட்டும் வஸ்த்துக்கள், அழகு கொஞ்சும் மலர் வகைகள்..எல்லாம் வாங்கி முடித்ததும்,  அப்படியே களைப்பு தீர ஒரு கப் காபி, சாண்ட்விச், டோனட்  இதவிட வேற என்னங்க வேணும்? 

                  பொதுவாக நாங்கள் சனிக்கிழமை காலை இங்கு வருவோம், 11 மணிக்கு மேல் மார்கெட்டில் பாதி விற்றுவிடும் என்பதால் 8 மணிக்குள் செல்வது உசிதம். அதோடு காலைக்காற்றை சுவாசித்துக்கொண்டே நடப்பது ஒரு சுகம்..போகும்போது கொஞ்சம் சில்லறையும், ஒரு கைப்பையும் எடுத்து செல்ல வேண்டும். சில்லறை இல்லையென்றால் நம்ம ஊர் பஸ்ஸை விட கஷ்டமாகிவிடும்.

                    குளிரூட்டபட்ட அறையில் பல நாட்களாய் வாடி, செயற்கையாய் புதிய தோற்றமளிக்கும் காய்கறிகள் போல் இல்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கொண்டுவரப்படுவதால் வாங்கும்போது மனதுக்கு நிறைவாக இருக்கும்.  வீட்டிலிருந்து லிஸ்ட் எடுத்துக்கொண்டு வருவது இங்கு செல்லாது. கண்டிப்பா ஒரு மடங்கு   அதிகம் வாங்கி வருவீர்கள். எப்படியோ எங்களைப்போல சொந்த ஊரைவிட்டு தொலைதூரம் வாழ்பவர்களுக்கு இந்த இடம் ஒரு வர(வார)ப்ப்ரசாதம் என்றால் மிகையாகாது.





  
     






                                                                                                Photos courtesy : Sabrina